சயிண்டிபிக்கா புரூவ் பன்னுனது, அப்படின்னா என்ன?

இடுகையிட்டது: புதன், 5 ஜனவரி, 2011 by Unknown in லேபிள்கள்:
11

....சயிண்டிப்பிக்கா புரூவ் பன்னிருக்காங்க தெரியுமா!!
இப்பல்லாம், அடிக்கடி ஒரு விசயத்த உண்மைன்னு நம்ப வைக்க பயன்படுத்தும் வார்த்தைகள்தான் இவை. இன்னும் சொல்லப்போனா, பல வார இதழ்கள்ள வர துணுக்குகள்ள முக்காள்வாசி இந்த வகையச்சேர்ந்தவைதான். எதைஎடுத்தாலும், "ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சுருக்காங்க", "ஆய்வுபூர்வமா நிரூபிச்சுருக்காங்க" அப்படிங்குற வாசகங்கள் அதிகமா இருக்கும். ஒரு படி மேல போய், "அமேரிக்க விஞ்ஞானிகள், ஜப்பான் விஞ்ஞானிகள்  கண்டுபிடித்திருக்கிறார்கள்" அப்படின்னு கூட போடறதுண்டு. இதுல என்னன்னா, நம்ப ஊரு விஞ்ஞானின்னா நம்பமாட்டோம்ல...! 

ஆனா, உண்மை என்னனா, இந்த துணுக்குகள்ள பாதிக்குப்பாதி அல்லது, அதுக்கு மேலயே உண்மையான செய்திகள தாங்கி வரதில்லை. இது ஒரு வருத்தப்படவேண்டிய, கவணிக்கவேண்டிய ஒரு விசயம். இந்த துணுக்குகள் மூலமா பொது அறிவை வளர்த்துக்கறதில பெரும்பாண்மையானவர்கள், அதிகம் படிக்காத வீட்டில் இருக்கும் பெண்கள். வேலைக்கு போகாமல் இணையம் போன்ற வசதிகள் இல்லாத நிலையில் இருக்கும் படித்த சில பெண்களின் நிலையும் இதுதான். பெண்களின் மூலை மழுங்கடிக்கப்படுவது நல்லதில்லை அப்படீங்கறது என்னோட வாதம். எதிர் வாதம் ஏதும் இருந்தா, தயவு சென்சு டாக்டர். ஷாலினிய படிங்க, புரியும். 

பத்திரிகைகளில் இருந்து வருகிற இந்தவகை உண்மையற்ற செய்திகள் ஒரு புறமிருக்க, இன்றைக்கு அறிவியலோடு சேர்த்து ஆண்மீகம் பேசும் காவி முகமூடிக்கூட்டத்தோட மந்திர வார்த்தைகளும் இதுதான். 'மெட்டா பிசிகல் கான்செப்ட்', 'காசுமிக் எனர்ஜி'... இதெல்லாம் இவங்க பயன்படுதுற சில டெக்கினிக்கல் டெர்மினாலஜிகள்! இத நாங்க சும்மா சொல்லல, 'சயண்டிபிக்கா புரூவ் ஆயிருக்கு' அப்படின்னு சொல்லி, படிச்ச இளைஞர்கல நல்லா மூலை சலவை செய்யராங்க. 

பெரும்பாலும் ஓரளவு படித்த மற்றும் சமூக பொருப்புள்ள இளைஞர்கள்,  எந்த ஒரு விசயத்த எடுத்தாலும் யோசிச்சு, புரிஞ்சு செயல்படனும்னு நினைக்கிற புத்திசாலிகளாவே இருக்காங்க. ஆனா, நம்ம சமூகத்தில ஒரு ஆரோக்கியமான அறிவியல் புரச்சூழல் இல்லாத காரணத்தால அவங்களோட இந்த புத்திசாலித்தனமே அவர்களோட பலவீனமாவும் போயுடுது. இந்த மாதிரி இளைஞர்களை ரொம்ப அழகா இந்த மார்டன் சாமியார்கள் தங்கள் பக்கம் இழுத்துக்கறாங்க. தியானம், யோகாசனம் மாதிரியான மூளை மற்றும் உடலுக்கான பயிர்ச்சிகள்தான் இந்த ஹைடெக் குருக்களோட தூண்டில். தியானமோ, யோகாசனமோ இவையெல்லாம்மனதையும், உடலையும் சீராக்குகிற பயிர்ச்சி அப்படீங்கற வட்டத்த தாண்டி மூடநம்பிக்கை அப்படீங்கற வலையத்துக்குள்ள போய் சிக்கிக்கும்போதுதான் பிரச்சினை. 

என்னோட சொந்த அனுபவத்திலேயே பல உதாரணங்கள நான் பாத்துருக்கேன், பாத்துட்டும் இருக்கேன். இந்தமாதிரி போகிறவர்கள் பெரும்பாலும் ஒரு மாயமான, கற்பணை உலகத்துல வாழ ஆரம்பிச்சுடறாங்க. அதுக்கப்பரம், 'மஞ்ச கண்ணாடி' மாட்டின கததான். எதப்பாத்தாலும் மஞ்சல்தான். கொஞ்ச நாள் முன்னாடி இப்படி ஒரு நண்பர்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ, அவர் சொன்னார், நம்ப உடம்ப சுத்தி ஒரு மெல்லிய கண்ணுக்கு தெரியாடத லேயர் இருக்கும் விடுதலை (நான் தான்),  அதுதான் நம்ம நிரைய ஆபத்துகள்லேந்து காப்பாத்தும். அதை ஆரோக்கியமா வெச்சிக்கவேண்டியது ரொம்ப முக்கியம். தியானத்தின் மூலமா இது முடியும்னாரு. என்ன பேசரீங்க நட்பு (பேர் சொல்ல விரும்பல :(), இதெப்படி சாத்தியம் யார் சொன்னா இத உங்களுக்குன்னு கேட்டேன். எங்க தியான வகுப்புல சொன்னாங்க, நீங்கதான் பயாலஜிஸ்ட் (உயிரியல் நிபுனன்) ஆச்சே, இத பத்தி உங்களுக்கு தெரியாதா அப்படின்னு கேட்டாரு. இல்ல நட்பு அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது அப்படின்னேன். அவரும் விடாம, நம்ம தோளுக்கு மேல ஒன்னுமே இல்லயா, நல்லா யோசிச்சு பாத்து சொல்லுங்க அப்படின்னாரு. எனக்கு தெரிஞ்சு, நம்ம தோள்ல பல கோடிகணக்கான பாக்டீரியாக்கள்தான் வாழ்ந்துகிட்டிருக்குன்னு சொன்னேன். உடனே, 'அதான், அதேதான்; அததான் நாங்க சொல்றோம்'. 'இல்ல நட்பு, அது வெற, தவிர அதுக்காக நீங்க எதுவும் செய்யவேண்டாம், அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா விலங்குகளுக்கும் உண்டு; அதுக்கும் நீங்க தியானம் செய்யரதுக்கும் சுத்தமா சம்பந்தமே கிடையாது; தியானம் உங்க மூளை சம்பந்தபட்ட விசயம்', இது நான். அவர் விடுவதாக இல்லை, 'இல்ல விடுதலை, இத "சயின்டிபிக்கா புரூவ் பன்னிருக்காங்க" நம்புங்க'!!!! சரி, சயின்டிபிக்கா புரூவிருக்காங்கன்னா, எந்த சயின்டிபிக் ஜேர்னல்ல (ஆய்வுக்குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் பதிப்பிக்கப்படும் ஆய்விதழ்கள்) பப்லிஷ் பன்னிருக்காங்கன்னு கேட்டேன். 'புரியல விடுதலை' அப்படீன்னார். 

அதுதாங்க விசயம், 'அறிவியல் நிரூபனம்' அப்படீன்னா என்னனே தெரியாமலேயே இத சொல்லி திருஞ்சுகிட்டிருக்காங்க நம்ப ஆளுங்க. உலகத்துல எந்த மூலையில் ஒரு ஆய்வு நடந்தாலும், அதோட முடிவுகள சர்வதேச  ஆய்விதழ்கள்ள (Scientific journals) பதிப்பிக்கப்பட்ட பிறகுதான் அதை நிரூபனமாகக் கொள்ள முடியும். இந்த ஆய்விதழ்களுக்குன்னு பல ஆராய்ச்சியாளர்களைக்கொண்ட ஆசிரியர் குழு இருக்கும். அவங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக்குறிப்புகள், அல்லது கட்டுரைகள்ள சொல்லப்படிருக்குற அறிவியல் சோதனைகள், அந்த சோதனைகளுக்கு அந்த ஆராய்ச்சியாளர்கள் கையாண்ட முறைகள் இவைஎல்லாத்தையும் ஆசிரியர் குழு பரிசீலிக்கும். அந்த பரிசீலனையில் ஏற்படும் சந்தேகங்களை அந்த ஆய்வ மேற்கொண்ட ஆராய்ச்சியாலர்கள் சரியான முறையில் தெளிவு படுத்தினால்தான் அந்த ஆய்வுக்குறிப்போ, கட்டுரையோ ஆய்விதழ்கள்ள வெளியாகும். ஒரு ஆய்வை முழுமையா முடிக்க வருடக்கணக்காகும்னா, முடிச்ச ஆய்வ கட்டுரையா எழுதி, அத பரிசீலனைகளுக்குட்படுத்தி பதிப்பிக்கறதுக்கும் குறைந்தது 3 மாதத்துலேந்து 1 வருடம் வரை ஆகும். Nature, Science, PNAS, Cell...இவையெல்லாம் உலகின் இரு சில சிறந்த ஆய்விதழ்கள். இந்த மாதிரி நூத்துக்கணக்குல இருக்கு. வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறு ஆய்விதழ்கள் உண்டு. 

ஆக,  இதுக்கு பேருதான் 'சயின்டிபிக்கா புரூவ் பன்றது'. இனிமே யாராவது 'சயின்டிபிக்கா....ன்னு சொன்னாலே, எந்த ஜேர்னல்ல (Journal) அப்படீன்னு கேளுங்க... (ஆ)சாமியோ, காவியோ, சாயம் எல்லாம் வெளுத்துரும்! 

இதப்பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கீழ 2 வரி சொல்லிட்டு போங்க!! _/\_

11 கருத்துகள்:

  1. nila says:

    நல்ல பதிவு... :)
    உங்க பதிவுகள சில திரட்டிகளோட இணைச்சுட்டா இன்னும் பலர் இதப்பத்தி எல்லாம் படிக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு... விருப்பமிருந்தால் முயற்சி செய்து பாருங்க

  1. nice one na.. good to see your blog with updates :).

    Sorry i cant able to type in tamil

  1. Vijay says:

    அருமையான பதிவு... நன்னடை...

    ஆனால் தற்காலத்தில் எதெதற்கு ஆய்வு சஞ்சிகை அமைப்பதேன்றே இல்லாமல் போய் விட்டது... உ. இங்கே: http://www.epistemelinks.com/main/Journals.aspx?Format=Both&TopiCode=meta . இப்படி இருக்கையில் சிலர் இம்மாதிரி சஞ்சிகைகளைக் காட்டி நியாயப்படுத்தும் வாய்ப்பும் உள்ளதை நாம் மறுக்க முடியாது, என்பது என் கருத்து...

  1. Kaushik says:

    hi, It was a nice comprehension..I met one of my friend after a long time.. it was an almost similar conversation...
    But the points really nice...

    Note:I found many spelling in that,,, Hope you can improve it..

  1. Unknown says:

    How I wish I could read tamil as fast as I can speak.. Nekku vaai kizhiya pesa dhaan theriyum... ischool la tamil 2 years dhaan padichen... :(

  1. Unknown says:

    @ nila: நன்றி நிலா. திரட்டிகளில் என்னோட பதிவ இணைச்சுருக்கேன், ஆனா கருவிப்பட்டைகளை இன்னும் இணைச்சுக்கல :)

    @sathya: நன்றி தம்பி ;) அப்டேட் அப்பப்பவாவது பன்னனும்ல! தமிழ்ல எழுத ஈ-கலப்பை http://thamizha.com/ekalappai-tamil99. phonetic தேர்ந்தெடுத்டுகிட்டா, தமிழ் தட்டச்சு தெரியவேண்டிய அவசியம் இல்ல. உபுண்டுக்கு SCIM input method பயன்படுத்தலாம்!

    @vijay: நன்றி விஜய். எடுத்த உடனே குழப்பக்கூடாது இல்லயா, மொதல்ல ஆய்விதழ்கள்/சஞ்சிகைகள் என்னங்கறது சொல்லுவோம், அப்பரம் எது நல்லது/கெட்டதுன்னு கண்டுபிடிக்க கத்துக்குவோம்! :)

    @kaushik: நன்றி கெளஷிக். நிதானமா பார்த்தா, நம்முடைய நெருங்கிய வட்டத்துக்குள்ளயே நிரைய இந்தமாதிரி பார்க்க முடியுது.
    எழுத்துப்பிழை...... ஹும், தமிழ்ல ஆர்வம் இருக்குற அலவுக்கு அறிவு இல்லைங்கறது உண்மைதான். முடிஞ்சவரைக்கும் கத்துக்க முயற்சி பன்றேன்... late better than never u know :)

    @ dhiv: varugaikku nandhri dhiv. ischoolla 2 varusham mattum thamizha padichadhu ungathappillai... 12 varusham thamiz padicha ennala thappillama kuda ezhudha mudiyalayae ;)

  1. nila says:
    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
  1. தோழா,அறிவியல் எனும் கடலில் முத்தெடுக்க எடுக்க வந்துக்கொண்டே இருக்கும். எல்லாரும் குளிக்க முடியாது.அறிவியலாளர்க்கு நிரைய பொருப்பிருக்கிறது.அறிந்து கொள்வதைவிட அதனை வெளியாக்குவதுதான் கல்வியின் பயன். உங்கள் பணி சிறக்கவேண்டும் . வையம் பலனடைய வேண்டும்.குறிப்பாக சாமான்ய மக்கள் பலன் பெறவேண்டும். வெல்க உங்கள் பயணம்..
    "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழ்க்கம்."

  1. நல்ல கட்டுரை.
    Your tone says that whatever comes on journals are the only science.
    There are some things for which there's no clear cut scientific answer. ( Like, How birds migrate?, What is life? How is information stored in brain? What was the state of universe before big bang & so on).

    //நம்ப உடம்ப சுத்தி ஒரு மெல்லிய கண்ணுக்கு தெரியாடத லேயர் இருக்கும்.//
    உண்மைதான். It's magnetic field. I've realized it in my yoga class.

    My point is that something shouldn't be considered as not real since it's not published.

  1. Uma says:

    விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு! அந்த வரிகளை சொல்ல நினைப்பவர்க்ள் கொஞ்சம் பொறுப்புடன் referenceசுடன் சொல்லலாம்...reference இருந்தால்.

    I agree with other commenter that there are things around the planet which are not yet explored with the scientific tools. Just because they are not scitifically proven or published cannot be disregarded. Hope very soon science would resolve the unresolved. However anouncing those scientifically unproven things as scientifially proven is unethical.

  1. Unknown says:

    @ இறைகற்பனைஇலான்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர். செந்தமிழ் விரைவில் கை பழகும் என்று நம்புகிறேன்.

    @ பாலு மகேந்திரன்: நன்றி பாலு.
    when I started writing this very post, i made my self very clear that am not going to sound like, what is science and what is not; and i still believe that I was able to justify it throughout. I would like to register my strong disagreement with "my tone" as was heard from you. As the topic itself says, and as the text follows, I advocate and clarify what is something called, "Scientifically proven"! ;) Else, the text itself explains!

    @ uma: நன்றி உமா. I owe you one another thanks for the understanding! :)