BARC ஆராய்ச்சியாளர்களுக்கு நடப்பது என்ன?
இடுகையிட்டது: வியாழன், 4 மார்ச், 2010 by Unknown in லேபிள்கள்: நாட்டு நடப்புதிரு. மகாதேவன் (47), மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) விஞ்ஞானி பிப்ரவரி 22 அன்று அவருடைய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதலில் காவல்துறை இவரின் மரணம் ஒரு தற்கொலை என்று பதிவு செய்தது. பின்னர் இறந்த உடலை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இது கொலை என்று சந்தேகிக்கப்படுகிறது.
திதாசு பால் (27), விஞ்ஞானி, மார்சு 3 அன்று இரவு, அவரது வீட்டில் தூக்கிலிடப்பட்டபடி இறந்திருந்தார்.
முதல் மரணம் நிகழ்ந்து 10 நாட்களுக்குள் அடுத்த மரணம். இருவருமே அணுவிஞ்ஞானிகள். மரணம் நிகழ்ந்த இடம், அவரவர் வீடு அதுவும் BARC-குடியிருப்பு. அதிபாதுகாப்பான இடம். திதாசு அவர்களின் மரணம் தற்கொலையா கொலையா என்று இன்னும் தெரியவில்லை. ஒருவேலை இதுவும் கொலையாயிருக்கும் பட்சத்தில் இவை இரண்டும் சாதாரன கொலைகளாக கொள்ள முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் உள்ள IISC- ஆராய்ச்சிமைய வலாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டை மறந்திருக்க மாட்டோம். தீவிரவாத தாக்குதல்களுக்கு முக்கிய இலக்காகியிருக்கும் இந்தியா, இவற்றை சிறிதாக எடுத்துக்கொண்டால் அது முட்டாள்தனமாகிவிடும்.
இந்த மரணங்கள் தற்செயலான, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்ததாகக்கூட இருக்கலாம். ஆனால், தீவிரவாத தாக்குதல் என்ற கோணத்திலும் இதை பார்க்கவேண்டியது இன்றைக்கு கட்டாயமே. காலம் பதில்சொல்லும்வரை காத்திருப்போம்!
நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்